குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய வசதி அறிமுகம்


குடிநீர் குறித்த புகார்களை பதிவு செய்ய புதிய வசதி அறிமுகம்
x

சென்னை குடிநீர் வாரியம் குறித்த அனைத்து புகார்களையும், ஒரே இடத்தில் பதிவு செய்ய, புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

ChennaiMetroWater தொடர்பான அனைத்துப் புகார்களையும் எளிமையாகப் பதிவு செய்ய 'சென்னை குடிநீர் செயலி' எனும் புதிய Mobile App அறிமுகம்!

புகைப்படம் மற்றும் location இணைத்துப் புகார் தெரிவித்தால், உரிய காலத்தில் உதவிப் பொறியாளர் மூலம் தீர்வு! இல்லையெனில், 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்குப் புகாரளிக்கும் வசதி.

DravidianModel: மக்களை மையப்படுத்திய, தீர்வுகளை நோக்கிய நிர்வாகம்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story