மரக்காணத்தில் ரூ.25 கோடியில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் பொன்முடி

மரக்காணத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
மரக்காணத்தில் ரூ.25 கோடியில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம்: அமைச்சர் பொன்முடி
Published on

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், மயிலம் கிராமத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க அரசு ஆவன செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் புதிய பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்து மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மயிலம் கிராமத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க சாத்தியக்கூறு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com