புதிய ஸ்மார்ட் பஸ்நிலைய கட்டுமான பணிகள்

அருப்புக்கோட்டையில் புதிய ஸ்மார்ட் பஸ்நிலையம் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு ஆய்வு செய்தார்.
புதிய ஸ்மார்ட் பஸ்நிலைய கட்டுமான பணிகள்
Published on

அருப்புக்கோட்டை புதிய பஸ் நிலையம் முழுவதும் இடிக்கப்பட்டு அங்கு ரூ.8 கோடி மதிப்பில் புதிதாக ஸ்மார்ட் பஸ் நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய பஸ் நிலையத்தில் 64 கடைகள், உணவகம், பாலூட்டும் அறை, பாதுகாவலர் அறை, டிக்கெட் கவுண்ட்டர், கழிப்பறை வசதிகள் என பல்வேறு வசதிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்டு வருகிறது.

அதன் கட்டுமான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் புதிய பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு, மண்டல நிர்வாக பொறியாளர் இளங்கோவன், மண்டல நிர்வாக இயக்குனர் விஜயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

அப்போது கட்டுமான பணிகள் குறித்தும் கடைகள் எப்படி அமைய உள்ளன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் முகமது சாகுல் ஹமீது மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com