புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 4 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை
Published on

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 185 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது 4 பேர் மட்டும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று முதல் தவணை தடுப்பூசியை 1,467 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,201 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 89 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 31 ஆயிரத்து 669 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com