தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திருச்சியில் 20–ந் தேதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்

தமிழக ராணுவ தொழில் வழித்தடத்தை திருச்சியில் 20–ந் தேதி ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் ராணுவ தொழில் வழித்தடம் திருச்சியில் 20–ந் தேதி நிர்மலா சீதாராமன் தொடங்கி வைக்கிறார்
Published on

புதுடெல்லி,

சென்னை, ஓசூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ராணுவ தளவாட தொழிற்சாலைகளை இணைக்கும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது.

விழாவில் புதிய முதலீடுகள், புதிய ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பற்றிய அறிவிப்புகள் இடம்பெறும். இதற்கான கட்டமைப்பு வசதிகளுக்காக மத்திய அரசு ரூ.20 கோடி ஒதுக்குகிறது. அதேபோல கோயம்புத்தூரில் ராணுவ தளவாட கண்டுபிடிப்புகளுக்கான கேந்திரமும் அன்றே தொடங்கப்படும் என்று ராணுவ கொள்முதல் பிரிவு செயலாளர் அஜய்குமார் தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com