மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
Published on

சென்னை,

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் நிகழாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிராம சபை கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பழனிசாமி, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com