தமிழகத்தில் வேறு மொழிகளை திணிக்கவில்லை - மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்

கல்வி நிதி பெறும் விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என தமிழ்நாடு அரசுக்கு தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
சென்னையில் மத்திய நிதி மந்திரி தர்மேந்திர பிரதான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை தர முடியும். மாணவர்களுடைய நலனை விட உங்களின் அரசியலுக்கு முக்கியத்துவம் தராதீர்கள். நான் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருக்கிறேன். கல்வி நிதி குறித்து தமிழ்நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் பேசி இருகிறேன்.கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் நிலைப்பாட்டை திணிக்கக் கூடாது
தமிழக அரசுக்கு கல்வி சார்ந்த நிதியை ஆண்டுதோறும் வழங்கி வருகிறோம். ஆர்டிஇ நிதி தொடர்பாக நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது . ஆர்.டி.இ. நிதி தொடர்பாக தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம்.
தமிழகத்தில் மாநில பாட திட்ட பள்ளிகளில் தெலுங்கு, உருது, மலையாளம் என பல மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. 3ஆவது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்க சொல்கிறோம். தமிழகத்தில் வேறு மொழிகளை திணிக்கவில்லை. தமிழக பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. பல மாநிலங்கள் மும்மொழிக்கொள்கையை பின்பற்றுகின்றன.உத்தர பிரதேச மாணவர்கள் விரும்பினால் இந்தி, ஆங்கிலம் ஏன் தமிழ் கூட கற்கலாம்.
மொழியால் பிரிவினையை ஏற்படுத்தியவர்கள் தோற்று இருக்கிறார்கள்.சமூகம் அனைத்தையும் தாண்டி வளர்ந்து இருக்கிறது. மாணவர்களின் நலனைவிட அரசியலில் முக்கியத்துவம் செலுத்தாதீர்கள், இது சரியானது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திர பிரதான்,சங்க இலங்கிய காலத்தில் இருந்து இப்போது வரை தமிழ் மொழி அதே துடிப்புடன் உள்ளது. இன்னும் சிறப்பாக செயல்படுகிறது. தமிழ் கற்க ஆசைப்படுகிறேன் என்றார்.






