ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு உறுப்பினர் நியமனம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் உறுப்பினராக ரேகா பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு உறுப்பினர் நியமனம்
Published on

சென்னை,

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்திற்கு உறுப்பினராக ரேகா பிரியதர்ஷினியை நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பு ஒன்றைத் தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படுத்தும் வகையில் உருவாக்கிட உரிய சட்டம் இயற்றப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டு அதற்கான உரிய சட்டமும் இயற்றப்பட்டது (தமிழ்நாடு சட்டம் 17/2021), இச்சட்டம் 13.10.2021 முதல் அமலுக்கு வந்தது.

இவ்வாணையம் சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி P.R. சிவகுமார், தலைமையில் செயல்பட்டு வருகிற நிலையில் தற்போது காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பணியிடத்தில் J.ரேகா பிரியதர்ஷினியை நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், புதிததாக நியமனம் செய்யபட்ட உறுப்பினரின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com