முட்டுக்காட்டில் பண்ணை வீட்டில் வடமாநில தொழிலாளி மர்ம சாவு

முட்டுக்காட்டில் பண்ணை வீட்டில் வடமாநில தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படுகிறது.
முட்டுக்காட்டில் பண்ணை வீட்டில் வடமாநில தொழிலாளி மர்ம சாவு
Published on

சென்னையை அடுத்த முட்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகே பண்ணை வீடு உள்ளது. இங்கு உத்தண்டியை சேர்ந்த விஜய் (வயது 29) என்பவர் மேலாளராக பணியாற்றுகிறார். இந்த பண்ணை வீட்டில் வாடகைக்கு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த முன்னா (25) என்பவர் இங்கு கட்டிட வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு சம்பள பாக்கி வாங்குவதற்காக பண்ணை வீட்டுக்கு சென்றார். வீட்டின் பின்பக்கம் உள்ள சந்தில் சென்றபோது மின்சாரம் தாக்கி முன்னா இறந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு மார்பு, வலது கை ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக தெரிகிறது. முன்னா உடலை விஜய் முட்டுக்காடு பஸ் நிறுத்தம் அருகே வீசி சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கானத்தூர் போலீசார் முன்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து முன்னா மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது அடித்து கொலை செய்யப்பட்டாரா? என பண்ணை வீட்டின் மேலாளர் விஜயிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com