வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து சாவு

வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து இறந்தார்.
வடமாநில தொழிலாளி பாம்பு கடித்து சாவு
Published on

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே உள்ள என்.ஐ.டி. கல்லூரியில் கட்டிடங்கள் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் தச்சு தொழிலாளியாக மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த இந்திஸ் வர்மனின் மகன் ராஜேஷ்(வயது 21) வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 28-ந் தேதி இரவு கல்லூரி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ராஜேஷை பாம்பு கடித்தது. இதில் வலியால் துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com