பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் கையொப்பம் தேவையில்லை - சென்னை ஐகோர்ட்டு


பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் கையொப்பம் தேவையில்லை - சென்னை ஐகோர்ட்டு
x

கணவர் கையொப்பம் இல்லாததால் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

சென்னை

சென்னையை சேர்ந்த இளம்பெண் ரேவதி. இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு திருமணமானது. ஆனால், குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவி விவாகரத்து கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த விவாரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, இளம்பெண் ரேவதி கடந்த ஏப்ரல் மாதம் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவரின் பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாக இந்த தகவலும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்படவில்லை. இதனால், அவர் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டுள்ளார்.

அப்போது, திருமணமான பெண்கள் பாஸ்போர்ட் விண்ணப்ப அவரின் கணவரிடமிருந்து கையொப்பம் வாங்க வேண்டும் என்று 'படிவம் ஜே' (Form-J)-வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ரேவதியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் அவரது கணவர் கையொப்பம் இல்லாததால் அவரது பாஸ்போர்ட் விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் கையொப்பம் தேவை என்ற விதியை எதிர்த்து ரேவதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பெண் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கணவரின் அனுமதி கையொப்பம் தேவையில்லை ' என்று தீர்ப்பளித்தார்.

1 More update

Next Story