நாம் தமிழர் கட்சி சார்பில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சி சார்பில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சி சார்பில் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் கீழ் காணலாம்.

  1. திருப்பரங்குன்றம்: இரா.ரேவதி
  2. அரவக்குறிச்சி: பா.க. செல்வம்
  3. ஓட்டப்பிடாரம்: மு.அகல்யா
  4. சூலூர்: விஜயராகவன்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com