நர்சு தற்கொலை வழக்கில் காதலன் கைது

கும்பகோணத்தில் நர்சு தற்கொலை வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.
நர்சு தற்கொலை வழக்கில் காதலன் கைது
Published on

கும்பகோணம்;

கும்பகோணத்தில் நர்சு தற்கொலை வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்.

நர்சு தற்கொலை

கும்பகோணத்தை அடுத்த மணலூர் திருமாந்துறை தோப்புத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜன். இவருடைய மகள் வைஷ்ணவி (வயது22). இவர் நர்சிங் படித்து முடித்து விட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து செவிலியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று ஆஸ்பத்திரியில் உள்ள தங்கும் அறையில் வைஷ்ணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காதலன் கைது

இந்தநிலையில் வைஷ்ணவியின் செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் சதீஷ்குமார் (25) என்பவரை, வைஷ்ணவி காதலித்து வந்ததும், இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், மனமுடைந்து வைஷ்ணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதைத்தொடாந்து போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com