ஒகேனக்கல்லில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு

ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், விதிக்கப்பட்டிருந்த தடை 5-வது நாளாக நீட்டிக்கப்பட்டது.
ஒகேனக்கல்லில் 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு
Published on

பொன்னாகரம்,

கர்நாடக மற்றும் கேரள மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது

இந்த நிலையில் இன்றுகாலை 8 மணி நிலவரப்படி கர்நாடகத்தில் உள்ள கபினி அணையிலிருந்து 34,875 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 46,518 கன அடியுமாக மொத்தம் 81 ஆயிரத்து 393 கன அடி நீர் ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதனால் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் 4 வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைந்துள்ளதால் வெள்ளப்பெருக்கின்போது நீரில் மூழ்கியிருந்த ஐவர்பாணி, சினிஅருவி உள்ளிட்டவை தற்போது வெளியே தெரிகின்றன. காவிரி ஆற்றின் இருகரையும் தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்கவும், மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை 5-வது நாளாக நீட்டிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com