தஞ்சையில் முதியவர் மர்ம சாவு

தஞ்சையில் முதியவர் மர்மமாக உயிரிழந்தார்.
தஞ்சையில் முதியவர் மர்ம சாவு
Published on

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரம் உள்ள ஒரு மரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

இதையடுத்து அந்த முதியவர் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com