கடற்கரையில் முதியவர் பிணம்

பூம்புகார் கடற்கரையில் முதியவர் பிணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரையில் முதியவர் பிணம்
Published on

திருவெண்காடு:

பூம்புகார் கடற்கரையில் நேற்று முன்தினம் மாலை முதியவர் பிணம் கரை ஒதுங்கி இருப்பதாக பூம்புகார் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின்பேரில் பூம்புகார் கடற்கரை போலீசார் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் திருமலை தலைமையில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் இறந்தவரின் புகைப்படத்தை வெளியிட்டு, இறந்தவர் பற்றிய தகவலை தெரிந்தவர்கள் கூற வேண்டுமென கடற்கரை போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து இறந்தவர் மயிலாடுதுறை சேர்ந்த அருணாச்சலம் (வயது 81) என்று தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர் அருணாச்சலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதனால் அவர் மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com