பரமத்திவேலூரில்கார் மோதி முதியவர் பலி

பரமத்திவேலூரில்கார் மோதி முதியவர் பலி
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள வெட்டுக்காட்டு புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பழைய பைபாஸ் சாலையில் நடந்து சென்றார். அப்போது நாமக்கல்லில் இருந்து பரமத்திவேலூர் நோக்கி வேகமாக வந்த கார் சாலையை கடக்க முயன்ற பழனி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற வேலூர் போலீசார் பழனியின் உடலை பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com