மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

விக்கிரமசிங்கபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
Published on

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் வைத்திலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 76). சைக்கிள் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு வீட்டில் இருந்து தனது கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுப்புராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுப்புராஜ் இறந்தார். விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவரை தேடி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com