பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்

டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நகல் எடுத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதால் பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழமையான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்
Published on

டிஜிட்டல் தொழில்நுட்பம்

பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் அனைத்தும் ஆய்வு பணிகளுக்கு கிடைக்கும் வகையில் தனியார் நிறுவனங்களிடம் இருந்தும், தனி நபர்களிடமிருந்தும் அவற்றை சேகரித்து பாதுகாப்பாக வைத்திட தமிழ்நாடு ஆவணங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறையின் ஆணையர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் தமிழ்நாடு ஆவண காப்பகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இக்குழுவினால் புனரமைக்கப்பட்டு டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் நகல் எடுத்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கலாம்

மேலும் இத்தகைய பதிவுகள் கால வெள்ளத்தாலும், மனித அலட்சியத்தாலும் நமது நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் தடயங்களை அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்படும். அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களின் மூலமாக கிராமங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் மற்றும் உரிமையாளரின் பெயர்கள், தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் போன்றவற்றின் விவரங்கள் தமிழ்நாடு ஆவணக் காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே அரியலூர் மாவட்ட பொதுமக்கள் தனிப்பட்ட பழமையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவுகள் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அல்லது சென்னை தமிழ்நாடு ஆவண காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆய்வு ஆணையரிடம் ஒப்படைக்கலாம் என  மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com