மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

ஆலங்குளம் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனி மனைவி கனகம்மாள் (வயது 63). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் பூச்சிமருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கனகம்மாள் பார்வை குறைபாடுக்கு சிகிச்சை பெற்றதாகவும், அதில் அவருக்கு சரிவர குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com