மொளசி அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி

மொளசி அருகேகாவிரி ஆற்றில் மூழ்கி மூதாட்டி பலி
Published on

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அடுத்த மொளசி கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 38). இவருடைய மனைவி அன்னக்கிளி. கூலித்தொழிலாளர்களான 2 பேரும் நேற்று காலை 9 மணி அளவில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த பெரியசாமியின் தாய் அகிலா (75) என்பவர் இறையமங்கலம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இந்த தகவல் வாட்ஸ்-அப்பில் பரவியது. இதனை வாட்ஸ்-அப்பில் பார்த்த கொசவம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பெரியசாமி ஆற்றங்கரைக்கு சென்று தாயின் உடலை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். இதுதொடர்பாக அவர் கொடுத்த புகாரின்பேரில் மொளசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com