மூதாட்டி பலி

விபத்தில் காயம் அடைந்த மூதாட்டி இறந்தார்
மூதாட்டி பலி
Published on

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளத்தை சேர்ந்தவர் காசிதுரை மனைவி அமுதா (வயது 75). இவர் சம்பவத்தன்று தனது மகன் புஷ்பராஜனுடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக சென்றார். பேட்டை சாஸ்திரி நகர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து அமுதா தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com