லாரி மோதி மூதாட்டி பலி

வேலூரில் லாரி மோதி மூதாட்டி பலியானார்.
லாரி மோதி மூதாட்டி பலி
Published on

கர்நாடக மாநிலம் கோலார் பங்காருபேட்டையை சேர்ந்த லோகநாதன் மனைவி ஜெகதா (வயது 70). இவர் வேலூர் கொணவட்டத்தில் உள்ள மகள் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

இந்த நிலையில் ஜெகதா கடந்த 16-ந்தேதி கொணவட்டம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெகதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com