ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்

ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

2-வது வெள்ளிக்கிழமை

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி இன்று வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் கூழ் காய்ச்சி அம்மனுக்கு படைத்து, விளக்கேற்றி வழிபட்டனர் அம்மன் கோவிலில் கூட்டம் அலைமோதியது. பத்ரகாளிபுரம் பத்ரகாளி அம்மன், உப்புக்கோட்டை அங்காள பரமேஸ்வரி, கன்னிகா பரமேஸ்வரி ஆகிய கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

சிறப்பு வழிபாடு

கூடலூரில் உள்ள கூடல் சுந்தரவேலவர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அம்மனுக்கு மஞ்சள், இளநீர், தயிர், பச்சரிசி மாவு உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். போடி சீனிவாச பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசையையொட்டி பத்மாவதி தாயாருக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

பெரியகுளம் கம்பம் சாலையில் உள்ள காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com