ஜி-20 மாநாட்டையொட்டி... சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை - போலீசார் அறிவிப்பு

சென்னை நகரில் உள்ள எல்லைப்பகுதியும், மேற்படி பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்களும் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த எல்லைப்பகுதியில் 3 நாட்களும் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லா இதர வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜி-20 மாநாட்டையொட்டி... சென்னையில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை - போலீசார் அறிவிப்பு
Published on

சென்னையில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 2-ந் தேதி வரை 3 நாட்கள் ஜி-20 கல்வி செயற்குழு மாநாட்டின் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சிகள் மாமல்லபுரத்திலும் நடக்கிறது. இந்த மாநாட்டு நிகழ்ச்சியில் 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த பிரதிநிதிகள் சென்னையில் உள்ள தாஜ்கோரமண்டல், தாஜ் கன்னிமாரா, ஹயாத், தாஜ் கிளப்ஹவுஸ் ஆகிய ஓட்டல்களில் தங்குகிறார்கள். ஐ.ஐ.டி.ஆராய்ச்சி பூங்காவில் நடைபெறும் கருத்தரங்கிலும் பங்கேற்கிறார்கள்.

எனவே மேற்கூறப்பட்ட சென்னை நகரில் உள்ள எல்லைப்பகுதியும், மேற்படி பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்களும் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. இந்த எல்லைப்பகுதியில் மேற்கூறப்பட்ட 3 நாட்களும் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லா இதர வான்வெளி வாகனங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் சென்னை போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com