தமிழகத்தில் ஒரே நாளில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்ற 1,249 பேர் பதவி ஏற்பு

தமிழகத்தில் ஒரே நாளில், கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்ற 1,249 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்ற 1,249 பேர் பதவி ஏற்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிந்த நிலையில், அவற்றுக்கு தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது. அதன்படி தேர்தல் நடவடிக்கைகள் நடந்தன. ஆனால் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவால் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. அதில் ஐகோர்ட்டின் இடைக்கால தடை விலக்கப்பட்டது. தேர்தல்களை தொடர்ந்து நடத்த அனுமதித்த சுப்ரீம் கோர்ட்டு, முடிவுகளை மட்டும் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com