கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

சீவலப்பேரி கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கொலை வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது
Published on

சீவலப்பேரி:

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி யாதவர் தெருவை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் மாயாண்டி (வயது 38). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுவரை 15 பேரை கைது செய்து உள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜவல்லிபுரத்தை சேர்ந்த சந்துரு (21) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com