அம்பை போலீஸ் ஸ்டேஷனில் குறிப்பிட்ட 3 நாட்கள் சிசிடிவி காட்சிகள் மட்டும் அழிப்பு.? புதிய தகவல்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக காட்சிகள் பதிவாகவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பை போலீஸ் ஸ்டேஷனில் குறிப்பிட்ட 3 நாட்கள் சிசிடிவி காட்சிகள் மட்டும் அழிப்பு.? புதிய தகவல்
Published on

அம்பை,

அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சார் ஆட்சியர் தரப்பு அதிகாரிகள், பாதிப்பு நடைபெற்ற காவல் நிலையங்களில் ஆய்வு செய்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்தபோது, மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பதிவாகவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா பழுது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப ரீதியாக குறிப்பிட்ட 3 நாட்களில் பதிவான காட்சிகளை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், மற்ற இரு காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, அதன் அடிப்படையிலும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com