செந்தில்பாலாஜியை குடும்பத்தினர் மட்டுமே சந்திக்க அனுமதி..!

அமைச்சர் செந்தில் பாலாஜியை குடும்பத்தினர் மட்டுமே சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜியை குடும்பத்தினர் மட்டுமே சந்திக்க அனுமதி..!
Published on

சென்னை,

7 மணிநேர சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறையால் கைது செய்யப் பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, என்.ஆர்.ரகுபதி, ஐ.பெரியசாமி, சபரீசன் உள்ளிட்டவர்கள் சந்தித்து உடல் நலம் கேட்டறிந்தனர். அதேபோன்று தி.மு.க.வை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், நீதிமன்ற காவலில் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், செந்தில் பாலாஜி குடும்பத்தினர் மட்டுமே அவரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு கூறினார். அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவர்கள், அவரது உறவினர்களை சந்தித்து செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து கேட்டறிந்தோம்.. உடனடியாக செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com