ஊஞ்சலூர் நடுப்பாளையம் பாபா கோவிலில் 108 சங்காபிஷேகம்

ஊஞ்சலூர் நடுப்பாளையம் பாபா கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
ஊஞ்சலூர் நடுப்பாளையம் பாபா கோவிலில் 108 சங்காபிஷேகம்
Published on

ஊஞ்சலூர்

ஊஞ்சலூர் அருகே வெள்ளோட்டாம் பரப்பு பேரூராட்சிக்குட்பட்டது நடுப்பாளையம். இங்கு சாய் பாபா கோவில் புதிதாக அமைக்கபட்டுள்ளது. இந்த கோவிலில் கடந்த 2-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. நேற்று மண்டல பூஜை நிறைவு விழா காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை நடந்தது. இதனையொட்டி 108 சங்குகளால் சாய் பாபாவுக்கு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கோவிலில் யாக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com