புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி கூடங்கள் திறப்பு

புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி கூடங்கள் திறக்கப்பட்டன.
புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளி கூடங்கள் திறப்பு
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுதேர்வுகள் முடிவடைந்து கடந்த ஏப்ரல் மாதம் 14ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தற்போது விடுமுறை முடிவடைந்து புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. ஒருசில தனியார் பள்ளிகள் 6 மற்றும் 13ந்தேதிகளில் திறக்கப்பட உள்ளன.

தனியார் பள்ளிகள் சார்பில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை வழங்கப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறந்த உடன் இன்றே புத்தகங்கள் மற்றும் சீருடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com