மகாளய அமாவாசையையொட்டி 270 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மகாளய அமாவாசையையொட்டி 270 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று மேலாண் இயக்குனர் மோகன் கூறி உள்ளார்.
மகாளய அமாவாசையையொட்டி 270 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சிறப்பு பஸ்கள்

கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் மகாளய அமாவாசையையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் பொது மக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, மதுரை, தேவக்கோட்டை, ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, தேவிபட்டினம், மானாமதுரை, ஆகிய இடங்களிலிருந்து ராமேஸ்வரத்திற்கும் அதே போல் ராமேஸ்வரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் இரவு பகலாக 150 சிறப்பு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகிறது.

தஞ்சை, கும்பகோணம், திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, திருமானூர், ஆகிய இடங்களிலிருந்து திருவையாறுக்கும் அதேபோல் திருவையாற்றிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, பொறையாறு ஆகிய இடங்களிலிருந்து பூம்புகாருக்கும், அதேபோல் பூம்புகாரிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 20 சிறப்பு பஸ்களும், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பட்டுக்கோட்டை, வேதாரண்யம் ஆகிய இடங்களிலிருந்து கோடியக்கரைக்கும் அதேபோல் கோடியக்கரையிலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் 25 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

முன்பதிவு

திருச்சி மத்திய பஸ் நிலையம், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் ஆகிய இடங்களிலிருந்தும் பெரம்பலூர், மணப்பாறை, துறையூர், அரியலூர், விராலிமலை ஆகிய இடங்களிலிருந்தும் சமயபுரத்திற்கும் அதேபோல் சமயபுரத்திலிருந்து மேற்படி அனைத்து ஊர்களுக்கும் மற்றும் திருச்சி மத்திய பஸ் நிலையம், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கும் அதேபோல் ஸ்ரீரங்கத்திலிருந்து திருச்சி மத்திய பஸ் நிலையம், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திற்கும் 50 கூடுதல் சிறப்பு பஸ்கள் என மொத்தமாக 270 கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

ராமேஸ்வரம் செல்லவும் ராமேஸ்வரத்திலிருந்து திரும்ப வரவும் பயணிகள் முன்னதாக முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்து கழகங்கள் கணித்து அதற்கு ஏற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும். எனவே பயணிகள் www.tnstc.in என்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com