மடிக்கணினிகளில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை நீக்க உத்தரவு..!

இலவச மடிக்கணினிகளில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மடிக்கணினிகளில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை நீக்க உத்தரவு..!
Published on

சென்னை,

கல்வித்துறை வசமுள்ள இலவச மடிக்கணினிகளில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் மடிக்கணினிகள் விநியோகிக்க முடியாத நிலையில் கல்வித்துறை வசம் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால் மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அகற்றுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com