மத்திய கிழக்கை நோக்கி எங்கள் வெள்ளைப் புறா- வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு


மத்திய கிழக்கை நோக்கி எங்கள் வெள்ளைப் புறா- வைரமுத்து ‘எக்ஸ்” பதிவு
x

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

காசாவில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்தும், அங்கு உடனடியாக போர் நிறுத்தம் தேவை என்பதை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல் அமைச்சர் முக ஸ்டாலினின் இந்த அறிவிப்பை வரவேற்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

"காசாவில் நிகழும்

இனப்படுகொலைகளுக்கு எதிராகத்

தமிழ்நாடு சட்டமன்றத்தில்

தீர்மானம் நிறைவேற்றப்படும்

என்பது ஒரு நற்செய்தியாகும்;

நம்பிக்கை தருவதாகும்

காசாவின்

உலர்ந்த வானத்தில் பெய்யும்

தமிழ்நாட்டு மழையாகும்

முதலமைச்சர்

மு.க.ஸ்டாலின் அவர்களின்

மனிதாபிமானத்தை

மனம் உள்ளவர்களெல்லாம்

பாராட்டுவார்கள்

காசா ஒரு சிறு பகுதிதான்

41 கி.மீ நீளமும்

10 கி. மீ அகலமும் கொண்ட

ஓர் ஒட்டு நிலம்தான்

ஆனால்,

தண்ணீர் இல்லாத

அந்தப் பாலை நிலத்தில்

ரத்த ஊற்று பீறிடுகிறது

உலகத்தின் கண்களில் விழுந்த

கந்தகத் தூளாக

அது உறுத்திக்கொண்டே இருக்கிறது

முதலில் அந்த மக்கள்

உயிரோடு இருக்க வேண்டும்

இந்தத் தீர்மானம்

சர்வதேசச் சமூகத்தின் மீது

தமிழ்நாடு சட்டமன்றம் காட்டும்

அன்பென்றும் அக்கறையென்றும்

போற்றப்படும்

தீப்பிடித்த வீட்டில்

ஆளுக்கொரு குடம் தண்ணீர்

அள்ளி இறைப்பதுபோல

அனைத்துக் கட்சிகளும்

இந்தத் தீர்மானத்தை

ஆதரிக்கும் என்று நம்புகிறோம்

இது

உலக சமாதானத்துக்கு

எங்கள் பங்கு

மத்திய கிழக்கை நோக்கி

எங்கள் வெள்ளைப் புறா"

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story