சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி

சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி நடந்தது.
சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி
Published on

கரூர் மாவட்ட பொது நூலகத்துறை சார்பில் 55-வது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு சிறைவாசிகளுக்கான ஓவியப்போட்டி நேற்று கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கிளைச்சிறையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மைய நூலகர் சிவக்குமார் தலைமை தாங்கினார். ஓவிய ஆசிரியர் கலைமுதுமணி துரைராஜ் ஓவியப்போட்டி குறித்து கருத்துரை வழங்கி நடுவராக செயல்பட்டார். கிளைச்சிறை கண்காணிப்பாளர் அருணாச்சலம் ஓவியப்போட்டியை தொடங்கி வைத்து, வாழ்த்துரை வழங்கினார். இந்த ஓவியப்போட்டியில் 51 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com