வனத்துறை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி

வனத்துறை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
வனத்துறை சார்பில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி
Published on

டி.என்.பாளையம்

சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு டி.என்.பாளையம் வனச்சரகம் சார்பில் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நேற்று நடந்தது. வனச்சரகர் மாரியப்பன் கலந்து கொண்டு ஓவியப்போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஓவியப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com