பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
Published on

சென்னை,

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட, தமிழக அரசு 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக பள்ளிகளில் பணியாற்றிவரும் சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் பொங்கல் போன்ஸ் வழங்க வேண்டும் என்கிற பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே, பகுதிநேர ஆசிரியர்களும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வண்ணம் அவர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கினால் அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக பொங்கல் போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறேன்.

தற்போது ரூ.12,500 தொகுப்பூதியத்தில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 13 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் மேம்பட திமுக அரசு தேவையான நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்கிற தேர்தல் வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. ஆகவே, அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com