பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.
பட்டிவீரன்பட்டி பேரூராட்சி கூட்டம்
Published on

பட்டிவீரன்பட்டி பேரூராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் சியாமளா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்பனாதேவி அருண்குமார் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் உமாசுந்தரி வரவேற்றார்.

கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அண்ணா மன்றம் எதிரே ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் தளம் அமைத்தல், டார்மெண்ட் நிதி மூலம் அம்பேத்கர் நகரின் கிழக்கு பகுதியில் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக பேவர் பிளாக் சாலை அமைத்தல், பொதுவினியோக திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறை மூலம் புதிதாக 3 ரேஷன் கடைகள் கட்ட ஆணை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com