மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Published on

ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகே நெடும்புலி ஊராட்சி, புதுப்பேட்டை பகுதியில் உள்ள மின்மாற்றி திடீரென்று பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் நேற்று மாலைவரை மின்தடை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மின்மாற்றியை பழுதுநீக்கி உடனடியாக மின்சேவை வழங்கவேண்டும் என்று மின்துறை அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

ஆனால் அதிகாரிகளோ பழுதை நீக்க நான்கு நாட்கள் ஆகும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் பனப்பாக்கம் - அரக்கோணம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட நெமிலி தாசில்தார் பாலசந்தர், மின்துறை அலுவலர்கள் மற்றும் நெமிலி காவல் துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com