ஈரோடு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தண்டனையை கொடுப்பார்கள்- ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறினார்.
ஈரோடு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தண்டனையை கொடுப்பார்கள்- ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ்
Published on

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மருது அழகுராஜ் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் கடுமையான தண்டனையை கொடுப்பார்கள். ஆனால் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. இப்படியொரு குழப்பமான மனநிலைக்கு தொண்டர்கள் ஆளாகியுள்ளார். தனது பெயரில் அதிமுகவை பட்டா போடுங்கள் என்று செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அரசியல், மிக விரைவில் முடிவுக்கு வரப் போகிறது. ஓ பன்னீர் செல்வத்தின் அமைதி பல செய்திகளை சொல்லி செல்கிறது. ஈரோடு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தண்டனையை கொடுப்பார்கள்.

மார்ச் 2ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் முடிவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு செய்தி கிடைக்கும். எடப்பாடி பழனிசாமியிடம் பொருளாதாரத்தை தவிர்த்து, வேறு எதுவும் கிடையாது. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தவறு என்று அவருடன் இருப்பவர்களே சொல்கிறார்கள். அதிமுக பிளவுபட்டால், திமுக எளிதாக வெற்றிபெறும். வரலாற்றில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com