நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- டி.டி.வி. தினகரன்

'நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்' என்று மதுரையில் டி.டி.வி. தினகரன் பேட்டியளித்தார்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்- டி.டி.வி. தினகரன்
Published on

மதுரையில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. போடாத சாலைகளுக்குகூட, போட்டதாக கணக்கு காட்டி கொள்ளை அடிக்கின்றனர். தி.மு.க. என்றாலே ஊழல் என்பதை தான் மேற்கண்ட நிகழ்வுகள் காட்டுகின்றன. ஒரு கட்சி என்பது அனைத்து மதத்துக்கும் நடுநிலையாக இருக்க வேண்டும். ஆனால் மதசார்பற்ற கட்சி என்று தி.மு.க. கூறிக்கொண்டு, இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகிறது. தேர்தலின்போது அளித்த எந்த வாக்குறுதிகளையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. எனவே பொதுமக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். தி.மு.க.விற்கு கூட்டணி பலம் இருந்தாலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் நிச்சயமாக பாடம் புகட்டி தோல்வியை தருவார்கள். 2023-ம் ஆண்டில் அ.ம.மு.க.வின் தேர்தல் வியூகம் வெளிப்படும். ஜெயலலிதா மறைவிற்கு பின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரம், பணத்தை நம்பி மட்டும் தான் அவர்களுடன் சிலர் இருந்தனர். அ.தி.மு.க. செயல்படாமல் இருப்பதற்கு அவர்கள் 2 பேர் மட்டும்தான் காரணம். தமிழகத்தில் அ.ம.மு.க. எதற்காக தொடங்கப்பட்டது? என்பதை இவர்கள் 2 பேரும் புரிய வைத்து உள்ளனர். ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு சரியான முறையை கையாண்டு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com