மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Published on

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுகுமாரன், பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று அவர் பொதுமக்களிடம் உறுதி அளித்தார். மேலும் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும் போலீசாரிடம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் தங்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து இலவச எண்ணில் (10581) புகார் தெரிவிக்கலாம் என்றார். கூட்டத்தில் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள்) ராணி மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com