திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
திருவள்ளூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Published on

மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பிரச்சினைகள் நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சினைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

இதில் நிலம் சம்பந்தமாக 103 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 57 மனுக்களும், வேலை வாய்ப்பு வேண்டி 38 மனுக்களும், பசுமை வீடு அடிப்படை வசதிகள் வேண்டி 61 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 107 மனுக்களும் என மொத்தம் 366 மனுக்கள் பெறப்பட்டது.

கோரிக்கை மனு

இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தினார்.

முன்னதாக நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்று திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்று அவைகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com