மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், மகளிர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டாமாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 525 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதுடன், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com