மக்களை தேடி மருத்துவம் திட்டம்: நடமாடும் மருத்துவமனை சேவையை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 256 மருத்துவ அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
கோப்புக்காட்சி
கோப்புக்காட்சி
Published on

சென்னை,

மக்களை தேடி மருத்தவம் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க ரூ.70 கோடி மதிப்புள்ள 389 வாகனங்கள் மூலம் நடமாடும் மருத்துவமனை சேவையை கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில்,சென்னையில் இரண்டாம் கட்டமாக 256 நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கவுள்ளார். அதன்படி,ஒய்எம்சிஏ மைதானத்தில் நடமாடும் மருத்துவமனை சேவையை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதன்படி,நடமாடும் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் பணியில் இருப்பர்.மலை கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சுழற்சி முறையில் நடமாடும் மருத்துவமனை செல்லும். தமிழகத்தில் உள்ள தொலைதூர கிராமப்புறங்களில் மருத்துவ சேவை அளிக்க மருத்துவ வாகனங்கள் கொண்டு செல்லப்படும்.

தமிழகம் முழுவதும் 80,000 கிராமங்களில் மருத்துவ வாகனம் மூலம் மாதந்தோறும் 40 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவமனையில் உயர் ரத்த அழுத்தம், நீரிவு நோய் பரிசோதனை மற்றும் இதர அத்தியாவசிய மருத்துவ சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com