இன்றும், நாளையும் பேரளம் ரெயில்வே கேட் மூடப்படும்

பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்றும், நாளையும் பேரளம் ரெயில்வே கேட் மூடப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.
இன்றும், நாளையும் பேரளம் ரெயில்வே கேட் மூடப்படும்
Published on

நன்னிலம்:

பேரளத்தில் தென்னரக ரெயில்வே மார்க்கத்தில் அமைந்துள்ள திருவாரூரில் இருந்து - மயிலாடுதுறை செல்லும் சாலையில் பேரளத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டில் பராமரிப்பு பணி இன்றும்(ஞாயிற்றுக்கிழமை), நாளையும்(திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த பராமரிப்பு பணி நடைபெறும் 2 நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை கேட் மூடப்பட்டு இருக்கும். இதனால் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல வேண்டும். இந்த தகவலை திருவாரூர் முதுநிலை பொறியாளர் சுரேஷ்பாபு, பேரளம் இளநிலை பொறியாளர் கணேஷ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com