அன்பழகன் உடலுக்கு பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதி ஊர்வலம்

கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு காலை 3 மணி அளவில் அன்பழகனின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
அன்பழகன் உடலுக்கு பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி - இன்று மாலை இறுதி ஊர்வலம்
Published on

சென்னை,

தமிழக அரசியலில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய பேராசிரியர் க.அன்பழகன், நள்ளிரவு 1.10 மணி அளவில் மரணம் அடைந்தார். அன்பழகன் மரணம் அடைந்ததை அறிந்ததும் மு.க.ஸ்டாலின் கண்ணீர் சிந்தினார். ஆஸ்பத்திரிக்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டனர்.

அதனை தொடர்ந்து க.அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அன்பழகன் உடலுக்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி அஞ்சலி செலுத்தினார். திருநாவுக்கரசர் எம்.பி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பெது மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் இறுதி அஞ்சலிக்கு பிறகு, இன்று மாலை அன்பழகனின் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com