குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
Published on

தென்காசி,

குற்றாலம் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவி, பழைய குற்றாலம் ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தற்காலிகமாக தடை விதித்தனர்.

ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், மெயின் அருவியில், தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து சீராக தண்ணீர் விழுந்துகொண்டிருக்கிறது. இதனால், குற்றாலம் மெயின் அருவியில் தற்போது சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com