கோபியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்திற்கு வந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கோபி செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
கோபியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார கூட்டத்திற்கு வந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Published on

சென்னை,

எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பங்கேற்ற நபர் ஒருவர் உயிரிழந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com