மாமனார், மருமகள் தகராறு : மதுரை அருகே நள்ளிரவில் 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை அருகே மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமனார், மருமகள் தகராறு : மதுரை அருகே நள்ளிரவில் 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு
Published on

மதுரை

சிவகங்கை மாவட்டம் கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சப்பாணி. இவருக்கும் அவரது மருமகள் தேவி என்பவருக்கும் ஏற்கனவே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதில் இருதரப்பை சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதலிலும், கைகலப்பிலும் ஈடுபட்டு வந்தனர்.

அவ்வப்போது ஏற்படும் தகராறை அவர்களது உறவினர்கள் சமரசம் பேசி தீர்த்து வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் இருதரப்பினரும் திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து அதுதொடர்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு மீண்டும் மாமனார், மருமகளுக்கிடையே ஏற்பட்ட தகராறு முற்றியது. அப்போது ஏற்பட்ட சண்டையை வழக்கம்போல் உறவினர்கள் விலக்கிவிட வந்தனர். இதில் மதுரை அருகே மூன்று இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடப் பிரச்சினையில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக மதுரை சிந்தாமணி ரிங்ரோடு அருகேயுள்ள மகாமுனி என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடத்தில் நள்ளிரவில் ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் கிடந்த பொருட்கள் மட்டும் சேதமடைந்தன.

இதேபோல் சிவகங்கை கட்டம்மன் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டிலும், அதே பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.

இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை சிலைமான் மற்றும் சிவகங்கை திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com